உள்ளூர் செய்திகள்

கலந்துரையாடல்

புதுச்சேரி: லாஸ்பேட் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சமூக விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி கருத்தரங்கம் கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்த் துறை பேராசிரியர் கண்ணன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கருப்புசாமி விழிப்புணர்வு நிகழ்சியை துவக்கி வைத்து பேசினார். சினிமா நடிகர் பாண்டி ரவி கலந்து கொண்டு கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்த்துறை மூன்றாமாண்டு மாணவர் தேவநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை