உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  உருளையன்பேட்டையில் தி.மு.க., கருத்தரங்கம்

 உருளையன்பேட்டையில் தி.மு.க., கருத்தரங்கம்

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால் தலைமை தாங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த அநீதிகளையும், பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளையும், அவர்களை முன்னேற விடாமல் தடுக்கும் பா.ஜ., - என்.ஆர்.,காங்., கூட்டணி அரசின் செயல்களை விளக்கிப் பேசினார்.மாநில மாணவரணி அமைப்பாளர் மணிமாறன், தொகுதி துணை செயலாளர் கண்ணதாசன், கவுரி, தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் நலக்குழு அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தொகுதி துணை செயலாளர் கண்ணதாசன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை