கோவில் திருவிழாவிற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
புதுச்சேரி:ராஜ்பவன் தொகுதி, குருசுகுப்பம் முத்துமாரி யம்மன் கோவில் திருவிழாவிற்கு காங்., மாநில செயலாளர் வக்கீல் குமரன் 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குருசு குப்பத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் ஆடி மாத பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. கோவில் திருவிழாவில் காங்., மாநில செயலாளர் வக்கீல் குமரன் கலந்து கொண்டு ஆலய பிரம்மோற்சவத்திற்கு 1 லட்சம் ரூபாய் நன்கொடையினை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ராஜாராம், வட்டார காங்., தலைவர் ராஜ்மோகன், செந்தில், மனோகர், முரளி, மோகனசுந்தரம், வசந்த்குமார், மகேஷ், தினகர், ராஜேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.