வரதட்சணை கொடுமை கணவர் மீது வழக்கு
புதுச்சேரி : மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய, கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன், 30. இவரது மனைவி கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் அஞ்சனா, 32. இவர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, அஞ்சனா வீட்டில், 120 சவரன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் சீதனமாக கொடுத்தனர். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ள நிலையில், சிவராமகிருஷ்ணன், அஞ்சனாவை, வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். அஞ்சனா கொடுத்த புகாரின் பேரில், சிவராமகிருஷ்ணன் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.