மேலும் செய்திகள்
தகராறு செய்த வாலிபர் கைது
30-Nov-2024
திருக்கனுார்: குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சந்தை புதுக்குப்பம் கே.பி.கே., மனைப்பிரிவு அருகே வாலிபர் ஒருவர், குடிபோதையில் அவ்வழியாக செல்லும் பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போதையில் பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.அதில், லிங்காரெட்டிப்பாளையம் தோப்பு வீதியை சேர்ந்த ராஜபாண்டியன், 29; என்பது தெரியவந்தது. ராஜபாண்டியன் மீது குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப் பதிந்து, போலீசார் கைது செய்தனர்.
30-Nov-2024