உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி

பாகூர்: பாகூர் அடுத்த சேலியமேடு புது தெருவை சேர்ந்தவர் முனியன் 67; இவர் புறவழிச்சாலை சேலியமேடு சந்திப்பில் சூப் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 16ம் தேதி இரவு சூப் கடையை மூடி விட்டு, வீட்டிற்கு செல்வதற்காக, புறவழிச் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது, அவ்வழியாக சென்ற பைக், முனியன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவருக்கு பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முனியன் இறந்தார். கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை