உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நில மோசடி வழக்கில் தலைமறைவான மூதாட்டி 5 ஆண்டிற்கு பின் கைது

நில மோசடி வழக்கில் தலைமறைவான மூதாட்டி 5 ஆண்டிற்கு பின் கைது

புதுச்சேரி : ஆள் மாறாட்டம் செய்து, நிலத்தை விற்று மோசடி செய்து தலைமறைவான மூதாட்டி, 5 ஆண்டிற்கு பின் போலீசார் கைது செய்தனர்.பிரான்சில் வசிப்பவர் கமலேசன். இவர், தனது தாய் கமலாட்சினிக்கு சொந்தமாக புதுச்சேரியில் இருந்த 4 பிளாட்டுகள் ஆள் மாறாட்டம் செய்து விற்கப்பட்டது குறித்து கடந்த 2019ல் புகார் அளித்தார். அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அதில், ஆள் மாறாட்டம் செய்து பிளாட்டுகளை விற்பனை செய்த மூதாட்டி சாந்தி,62; கடந்த 5 ஆண்டுகளாக முத்தியால்பேட்டை, சோலை நகரில் தலைமறைவாக வசித்து வருவதை கண்டுபிடித்து நேற்று கைது செய்தனர். முக்கிய குற்றவாளி சிக்கியுள்ளதால் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rajan
செப் 29, 2024 04:38

புதுவையில் பதுங்கி மன உளைச்சல் காரணமாக வெளியில் வந்த போது பாய்ந்து பிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நிதானமாக தேடுனு பெரியவர்கள் சொன்னது இதுதானா?