மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரிக்கு பிரதமர் வருகையையொட்டி இ.சி.ஆரில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால்துறை தாசில்தார் ராஜேஷ் கண்ணா உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரிக்கு இன்று 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். இதையொட்டி, புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள அனைத்து சாராயக் கடைகள், மதுபானக் கடைகள், சுற்றுலா அந்தஸ்து கொண்ட ஓட்டல்கள், உணவகங்கள், இன்று காலை முதல் மதியம் 2:30 மணி வரை கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும். அரசின் இந்த உத்தரவை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மதியம் 2:30 மணிக்கு மேல் மதுக்கடைகள் மற்றும் உணவகங்கள் வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.