பெண் மாயம்
புதுச்சேரி : பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மூலக்குளம், மதுராபேட் ரோட்டைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு சினேகா, திரிஷா என இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சினேகா, 26, கடந்த 13ம் தேதி மதியம் வெளியே சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.