| ADDED : டிச 04, 2025 05:08 AM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் ஐயப்பன் கோவிலில், 22ம் ஆண்டு, மகோற்சவ விழாவையொட்டி, கொடியேற்றம் நடந்தது. கடலுார் சாலையில் ஐயப்பன் கோவிலில், மகோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கோவிலில் உள்ள கன்னிமூல கணபதி, கருப்பன்சாமி, கருப்பாயி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து, இன்று (4ம் தேதி) இரவு 7:00 மணிக்கு ஐயப்ப பக்தர்களின் சிறப்பு பஜனை நடக்கிறது. நாளை (5ம் தேதி) காலை 7:00 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை மறுநாள் (6ம் தேதி) நோணாங்குப்பம் சங்கராபரணி ஆற்றில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்வான, 7ம் தேதி, 108 நெய் தேங்காய் பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.