சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கிராமங்கள் துண்டிப்பு: மக்கள் அவதி
திருக்கனுார்: சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கள் ஏற்பட்ட மணலிப்பட்டு- கூனிச்சம்பட்டு, கொடுக்கூர்- திருவக்கரை கிராமங்கள் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. புயல் எதிரொலியால் பெய்த கனமழை காரணமாக வீடூர் அணை திறக்கப்பட்டது. இதனால், புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி எல்லையான மணலிப்பட்டு- கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், மணலிப்பட்டு- கூனிச்சம்பட்டு கிராமங்கள் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இதேபோல், தமிழகப் பகுதியான கொடுக்கூர்- திருவக்கரை செல்லும் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், அக்கிராம மக்கள் 10 கி.மீ., தொலைவிற்கு சுற்றி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, மணலிப்பட்டு, செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த 3 கோழிப்பண்ணைகள், வெள்ளப்பெருக்கி்ல மூழ்கியது. இதனால், பண்ணைகளில் இருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.