தீவனுார் கோவிலில் குரு பெயர்ச்சி விழா
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள குருபகவான் சன்னதியில்குருபெயர்ச்சி விழா நேற்று நடந்தது.குருபகவான் நேற்று மதியம் 1:19 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி, காலை 11:00 மணிக்கு ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் மணிகண்டன், கோவிந்தசாமி, புதுச்சேரி ரவி ஆகியோர் செய்திருந்தனர்.