உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்றவர் சாவு

காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்றவர் சாவு

புதுச்சேரி: மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னையை சேர்ந்த பெற்றோர் இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர் ஸ்ரீராம், 25. இவர், உறவினர் மூலம், கடந்த 6 மாதங்களுக்கு முன், உப்பளம் நேதாஜி நகரில் இயங்கி வரும் மனநலம் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.அவர், நேற்று படுக்கையில் இறந்து கிடந்தார்.இதுகுறித்து, மனநலம் காப்பகத்தின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை