உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆடம்பர தேர்பவனி முதல்வர் துவக்கி வைப்பு

ஆடம்பர தேர்பவனி முதல்வர் துவக்கி வைப்பு

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் 70வது ஆண்டு பெருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி, காலை 7:30 மணிக்கு புதுச்சேரி - கடலுார் உயர் மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி, அருட்தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. விழாயொட்டி, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை 7:30 மணிக்கு சென்னை மயிலை உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா தலைமையில் திருப்பலி நடந்தது. மாலை 6:00 மணிக்கு நடந்த ஆடம்பர தேர்பவனியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். இதில், திரளான கிறிஸ்துவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (14ம் தேதி) தட்டாஞ்சாவடி பங்குதந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை