உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திய கம்யூ., நிர்வாகிக்கு மிரட்டல்

இந்திய கம்யூ., நிர்வாகிக்கு மிரட்டல்

பாகூர்: இந்திய கம்யூ., நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பாகூர் வேதபுரிநத்தம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன், 60; இந்திய கம்யூ., பாகூர் தொகுதி கமிட்டி உறுப்பினர். இவர், கடந்த 2ம் தேதி பாகூர் மேற்கு வீதியில் உள்ள டீ கடை அருகே நின்றிருந்தார். அங்கு வந்த பாகூர் கிழக்கு வீதியை சேர்ந்த பீஷ்மன் 40; தாமோதனிடம், நண்பர் மணிவண்ணன் எங்கே என கேட்டு மிரட்டல் விடுத்தார்.இது குறித்து தாமோதரன் அளித்த புகாரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ