உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்த முதியவர் குறித்து விசாரணை

இறந்த முதியவர் குறித்து விசாரணை

அரியாங்குப்பம்; இறந்த முதியவர் யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியாங்குப்பம் அடுத்த, நோணாங்குப்பம் படகு குழாம் அருகே, அடையாளம் தெரியாத, 61 வயது மதிக்கத்தக்க முதியவர், கடந்த 24ம் தேதி சுயநினைவின்றி படுத்திருந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ