மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் சாவு
27-Nov-2024
அரியாங்குப்பம்; இறந்த முதியவர் யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியாங்குப்பம் அடுத்த, நோணாங்குப்பம் படகு குழாம் அருகே, அடையாளம் தெரியாத, 61 வயது மதிக்கத்தக்க முதியவர், கடந்த 24ம் தேதி சுயநினைவின்றி படுத்திருந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.
27-Nov-2024