மேலும் செய்திகள்
சென்னிமலையில் 22ல் சஷ்டி விழா தொடக்கம்
18-Oct-2025
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா 22ம் தேதி துவங்குகிறது. முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி சித்தி விநாயகர் கோவிலில் 164ம் ஆண்டு கந்தர் சஷ்டி சூரசம்ஹார பெருவிழா வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, 22ம் தேதி முதல் 1ம் தேதி வரை தினமும் காலை சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 26ம் தேதி இரவு 8:00 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி, 27ம் தேதி மதியம் 2:00 மணிக்கு சூரபத்ரன் புறப்பாடு, இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 28ம் தேதி காலை 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும் 1ம் தேதி மாலை 5:00 மணிக்கு 108 சங்காபி ேஷகம் நடக்கிறது.
18-Oct-2025