உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரவு பணியில் பெண்களை அமர்த்த கூடாது; தொழிலாளர் துறை உத்தரவு

இரவு பணியில் பெண்களை அமர்த்த கூடாது; தொழிலாளர் துறை உத்தரவு

புதுச்சேரி: தொழிற்சாலைகளில் இரவு நேரத்தில் பெண்களை பணியில் ஈடுபடுத்த கூடாது என தொழிலாளர் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, தொழிலாளர் துறை செயலர் சுமித்தா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;

1948ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின்படி, கவர்னர் நிபந்தனைகளுக்குட்பட்டு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் பெண்களின் வேலை நேர வரம்புகள் மாற்றப்பட்டுள்ளது. இரவு 10:00 மணி முதல் காலை 5:00 மணி வரை எந்த தொழிற்சாலைகளிலும், பெண்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தவோ அல்லது அனுமதிக்கவோ கூடாது. மேலும், தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண் தொழிலாளர்களுக்கு, இரவு 10:00 மணி வரை, அவர்களின் வீட்டுக்கு செல்ல வாகன வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தொழிற்சாலையில், தினமும் வேலை நேரம் குறித்து, விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை