உள்ளூர் செய்திகள்

கூலி தொழிலாளி சாவு

புதுச்சேரி : லாஸ்பேட்டை, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் அமுதராஜ், 48; கூலி தொழிலாளி. ஒரு மகன், மகள் உள்ளனர். குடிபழக்கம் உடைய அமுதராஜ், உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.கடந்த 10ம் தேதி கருவடிக்குப்பம் சாராயக்கடையில் குடிபோதையில் மயங்கி கிடந்த அமுதராஜை, அவரது மகன் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இந்நிலையில் மருத்துவமனை எதிரே நேற்று காலை அமுதராஜ் இறந்து கிடந்தார்.புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ