எக்கோல் ஆங்கிலஸ் பள்ளியில் எழுத்தறிவு, எண்ணறிவு தினவிழா
புதுச்சேரி: புதுச்சேரி எக்கோல் ஆங்கிலஸ் துவக்கப் பள்ளியில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கருப்பொருள் தினவிழா கொண்டாடப்பட்டது. லப்போர்த் வீதியில் உள்ள எக்கோல் ஆங்கிலஸ் துவக்கப்பள்ளியில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கருப்பொருள் தினவிழா நேற்று நடந்தது. விழாவில் சமக்கிரக சிக்ஷா திட்ட இயக்குனர் எழில் கல்பனா தலைமை தாங்கினார். பள்ளித்துணை ஆய்வாளர் செல்வி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சிவகுமார் வரவேற்புரை ஆற்றினார். விழாவில், எஸ்.எஸ்.ஏ., உதவியுடன் அளிக்கப்பட்ட நிதியில் சுமார் 57 ஆயிரத்திற்கு மேல் மாணவர்களுக்கு கற்றல் துணைக்கருவிகள் கொண்டு ஆசிரியர்கள் கற்பித்தல் செயலை மேற்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்தனர்.