மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
30-Oct-2024
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம், பாவாணர் நகர் ஜலகண்ட முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலைக்குமார், 34. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்தார்.ரெட்டியார்பாளையம் லேம்பட் சரவணன் நகரைச் சேர்ந்த ரஞ்சிதா, 33, என்பவருடன் பழகி அவருடன் வாழ்ந்து வந்தார். இருவரும் சேர்ந்து ரெட்டியார்பாளையம் கல்லரை வீதியில் சாலையோர இரவு டிபன் கடை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு இருவரும் கடை முடிந்து வீட்டிற்கு வந்தனர். அப்போது மதுபோதையில் இருந்த கலைக்குமார் நான்காவது மாடியில் ஏறும் போது படியில் இருந்து தவறி விழுந்தார்.காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Oct-2024