மன் கீ பாத் நிகழ்ச்சி 25ம் தேதி வானொலியில் ஒலிபரப்பு
புதுச்சேரி: பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மன் கீ பாத் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி வானொலியில் ஒளிப்பரப்படுகிறது.பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றும், மனதின் குரல் நிகழ்ச்சி, வரும் 25ம் தேதி, காலை 11:00 மணியளவில், வானொலியில் ஒளிப்பரப்படுகிறது. இந்த நிகழ்ச்சி அன்று இரவு 8:00 மணிக்கு மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு தமிழில் ஒளிப்பரப்பாகும்.இவ்வாறு, அகில இந்திய வானொலி நிலையம், புதுச்சேரி நிகழ்ச்சிப் பிரிவு தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.