உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

காரைக்கால் : காரைக்காலில் உணவுக்கடையில் மொபைல் போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் திருநள்ளாறு ரோடு பகுதியை சேர்ந்த அலி அக்பர்,32; இவர் அப்பகுதியில் உள்ள உணவுக்கடையில் பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை திறந்து சாமிபடத்திற்கு பூஜை செய்தார். பின்னர் வந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்து ரூ.10ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போனை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் நகர ேபாலீசார் கடையில் உள்ள சி.சி.டி.வி., மூலம் மொபைல் போன் திருடிய நபரை தேடிவந்த நிலையில், நேற்று ரயில்நிலையத்தில் நின்ற கடலுாரைச் சேர்ந்த ஜெயசந்திரன்,35; போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ