நிலவேம்பு குடிநீர் வழங்கல்
புதுச்சேரி: டெங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்டநோயகள் பரவாமல் தடுக்கும் வகையில், மணவெளி தொகுதியில்,ரேவதி பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், நிறுவனர் ரேவதி, பொருளாளர் கதிரேசன், மகளிர் அணி விஜயா, துணைத் தலைவர் கார்த்திக். சட்ட ஆலோசகர் கலையரசன் முன்னிலையில் மணவெளி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.