உள்ளூர் செய்திகள்

மூதாட்டி தற்கொலை

புதுச்சேரி: சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்ட மூதாட்டி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏம்பலம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோதை, 80. இவர் சிறுநீரக, மூட்டுவலி பிரச்னைக்கு சிகிச்சை எடுத்து வந்தார். வலியால் அவதிப்பட்ட கோதை நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறத்தில் உள்ள சாத்துக்குடி மரத்தில் நைலான் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை