| ADDED : டிச 08, 2025 05:23 AM
அரியாங்குப்பம்: சென்னை ஊரக மின் வசதியாக்க கழக நிறுவனம் சார்பில், ஆற்றல் சேமிப்பு என்ற தலைப்பில் புதுச்சேரியில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஓவியப்போட்டி நடந்தது. போட்டியில், அபிஷேகப்பாக்கம், சேத்திலால் அரசு உயர் நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவர், கமலேஷ் இரண்டாம் இடம் பிடித்தார். புதுச்சேரி பிராந்திய அளவில் நடத்தப்பட்ட முதல் நிலை ஓவியப் போட்டியில் சிறந்த படைப்புகளை உருவாக்கியதற்காக 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சேத்திலால் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி விமிஷா இரண்டாம் நிலை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். பரிசளிப்பு நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி இயக்குனரக, இணை இயக்குனர் சிவகாமி, மாநில பயிற்சி மைய சிறப்பு பணி அலுவலர் சுகுணா சுகிர்தபாய், முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன், பள்ளித் தலைமை ஆசிரியை டார்லிங் வின்சி இந்திரா உட்பட பலர் பங்கேற்றனர். வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.