உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபர் சாவு போலீசார் விசாரணை

வாலிபர் சாவு போலீசார் விசாரணை

புதுச்சேரி: மதுபான கடை எதிரில் இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வில்லியனுார், வி.மணவெளி தண்டுக்கரை வீதியைச் சேர்ந்தவர் பழனிவேல், 44, திருமணமாகாதவர். குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை அரும்பார்த்தபுரம் பகுதியில் உள்ள மதுபான கடை எதிரில் இறந்து கிடந்தார். தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில்,போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை