உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஸ் நிலையத்தில் போலீஸ் சோதனை

பஸ் நிலையத்தில் போலீஸ் சோதனை

புதுச்சேரி: புதுச்சேரி தற்காலிக பஸ் நிலையத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் சாதாரண உடையில் நேற்றிரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.புதுச்சேரி நகர பகுதியில் அதிகரித்து வரும் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களைதடுக்கும் பொருட்டு, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, கிழக்கு பகுதி எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா ஆகியோர் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யாநாராயணா, சப் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் நேற்றிரவு சாதாரண உடையில்,புதுச்சேரி தற்காலிக பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.ஆய்வின்போது, கூட்ட நெரிசல் மிகுந்த பஸ்களில், ஏறி சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உள்ளனரா என, சோதனை செய்தனர். மேலும், பஸ்சிற்காக காத்திருந்தவர்களில் சந்தேகப்படும் படி நின்றிருந்த நபர்களை பிடித்து, அவர்களின் உடமைகளை ஆய்வு செய்தனர். பஸ் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை