இரும்பை பாலா திரிபுரசுந்தரி கோவிலில் பவுர்ணமி பூஜை
புதுச்சேரி : இரும்பை பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நடந்த பவுர்ணமி பூஜையில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திண்டிவனம் சாலையில் டோல்கேட் அருகே இரும்பை பாலா திரிபுரசுந்தரி கோவில், கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, பவுர்ணமியை முன்னிட்டு, அம்பாளுக்கு நேற்று இரவு 7:00 மணியளவில், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நவாவரண பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.