உள்ளூர் செய்திகள்

பிரதோஷ வழிபாடு

புதுச்சேரி : கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி நந்தியம் பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.புதுச்சேரி, கருவடிக்குப்பத்தில் பிரசித்திப் பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கும், நந்தியம் பகவானுக்கும் பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை