தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
புதுச்சேரி: மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். வில்லியனுார் அடுத்த அரசூர் பகுதியை சேர்ந்தவர் முகமது அஸ்வாத், 35; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சபூரா பேகம், 33; கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பணி புரிகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.இதனிடையே முகமது அஸ்வாத் அடிக்கடி மது அருந்தி விட்டு, சபூரா பேகமிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 27ம் தேதி மது அருந்தி விட்டு வந்து, வீட்டில் தகராறு செய்தார். இதனால் சபூரா பேகம் கோபித்து கொண்டு, குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த முகமது அஸ்வாத் வீட்டில் அவரது அறையில் துாக்குப் போட்டு தற் கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.