உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்கூட்டர் திருட்டு

ஸ்கூட்டர் திருட்டு

புதுச்சேரி: துாய்மை பணியாளரின் பைக்கை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் சுப்ரமணியின் மகன் சிவக்கொழுந்து,27; புதுச்சேரி ஏர்போர்டில் தனியார் வசம் உள்ள பிரிவில், துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 7ம் தேதி தனது சகோதரியின் ஸ்கூட்டரில் வேலைக்கு சென்றார். அன்று இரவு 8:30 மணிக்கு குயவர் காலனிக்கு செல்லும் வழியில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு நண்பரை பார்க்க சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை