உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஞ்சவடீயில் புரட்டாசி சிறப்பு பூஜை

பஞ்சவடீயில் புரட்டாசி சிறப்பு பூஜை

புதுச்சேரி: பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ச நேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது. புதுச்சேரி அடுத்த பஞ்ச வடீயில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி சுவாமிக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் 'ஸ்வர்ண புஷ்ப சங்கல்ப பூஜை', சிறப்பு அர்ச்சனை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புரட்டாசி மாத 4 சனிக்கிழமைகளிலும் காலை 11:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை