உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆன்மிக நடைபயணம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆன்மிக நடைபயணம்

வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை பவுர்ணமி ஆன்மிக நடைபயணம் சென்றனர்.வில்லியனுாரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இதனை சுற்றி பிரசித்திபெற்ற ஆறு சிவாலயங்களும், 18 சித்தர்கள் ஜீவ சமாதியுடன் ஆன்மிக பூமியாக திகழ்கிறது.திருவண்ணாமலை கிரிவலம் போன்று, பவுர்ணமி நாளில் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆன்மிக நடைபயணம் செல்லுகின்றனர்.அதன்படி நேற்று 36வது மாத பவுர்ணமி ஆன்மிக நடைபயணம் நடந்தது.கோவில் வளாகத்தில் துவங்கிய நடையணம் மாட வீதிகள் வழியாக மூலக்கடை, சுல்தான்பேட்டை, வி.மணவெளி, ஒதியம்பட்டு, திருக்காஞ்சி, உறுவையாறு, ஆச்சார்யா புரம், கோட்டைமேடு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.ஆன்மிக நடைபயணத்தில் புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை