மேலும் செய்திகள்
இளம் பெண் மாயம் போலீஸ் விசாரணை
11-Sep-2024
பாகூர்: மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாகூர் அடுத்த மணமேடுபேட், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஏழுமலை; கூலி தொழிலாளி. இவரது மகன் மாதவன் 17; பிளஸ் 2 முடித்து விட்டு கல்லுாரியில் சேர விண்ணப்பம் செய்துள்ளார். இவர் அடிக்கடி தனது நண்பர் வீட்டிற்கு சென்று இரண்டு, மூன்று நாட்களில் மீண்டும் வீடு திரும்புவார். கடந்த 15ம் தேதி வெளியே சென்ற மாதவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் மீனாட்சி அளித்த புகாரின் பேரில், கரையாம்புத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
11-Sep-2024