உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று அதிகாலை 4.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 11.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கோவில் பூசாரிகளும், பக்தர்களும் தாலாட்டு பாடி ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா தலைமையில் 400க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இரவு நடந்த ஊஞ்சல் உற்சவத்திலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக சென்னை, பெங்களூர், வேலுார், கடலுார் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை