தமிழ்நாடு, ஹைதராபாத், ஆந்திரா அணிகள் வெற்றி
புதுச்சேரி: சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, ஹைதராபாத், ஆந்திரா அணிகள் வெற்றி பெற்றன.புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஹைதராபாத், கோவா ஆகிய 7 மாநில கிரிக்கெட் அசோசியஷன் இணைந்து 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான 2 நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் புதுச்சேரி துத்திப்பட்டு சீகெம் மைதானம் மற்றும் லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்து வருகிறது.சீகெம் மைதானம் 3ல் நடந்த, போட்டியில் ஆந்திரா, கேரளா அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆந்திரா அணி 90 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 396 ரன்கள் எடுத்தது. கேரளா அணி 74 ரன்களில் ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலையில் ஆந்திரா அணி வெற்றி பெற்றது. 4ல் கோவா, ஹைதரபாத் அணி மோதியது. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழந்து 407 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது . கோவா அணி 162 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது . முதல் இன்னிங்ஸ் முன்னினையில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி மைதானத்தில் தமிழ்நாடு, கர்நாடக அணி மோதியது. முதலில் விளையாடிய தமிழ்நாடு அணி 90 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 304 ரன்கள் எடுத்து, கர்நாடக அணி 90 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 235 ரன்கள் மட்டுமே எடுத்தது . முதல் இன்னிங்ஸ் முன்னினையில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது .