உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயங்கி விழுந்து மூதாட்டி இறந்தார்

மயங்கி விழுந்து மூதாட்டி இறந்தார்

அரியாங்குப்பம்: உடல் நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி மயங்கி விழுந்து இறந்தார்.அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மனைவி விமலாதேவி, 54, இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் மயங்கி கீழே விழுந்தார். அவரை வீட்டில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனையிக்கு சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ