உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீபாவளி பண்டிகை எதிரொலி சுற்றுலா மையங்கள் வெறிச்

தீபாவளி பண்டிகை எதிரொலி சுற்றுலா மையங்கள் வெறிச்

அரியாங்குப்பம்: தீபாவளி பண்டிகையொட்டி, மக்கள் இல்லா மல் சுற்றுலா இடங்கள், வெறிச்சோடி காணப்பட்டது. நோணாங்குப்பம் படகு குழாமில், வார விடுமுறை நாளான ஞாயிற்று கிழமையில், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதும். தீபாவளி பண்டிகை மற்றும் மழை காரண மாக நேற்று படகு குழாமில், மக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அதே போன்று, புதுச்சேரி மெரினா கடற்கரை, பாரதி பூங்கா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, வீராம்பட்டினம் கடற்கரை, பூரணாங்குப்பம், நல்லவாடு கடற்கரை பகுதிகளில் மக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.மேலும், கோவில்களிலும் மக்கள் கூட்டம், குறைவாகவே காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி