உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயில் மோதி பெண் பலி

ரயில் மோதி பெண் பலி

காரைக்கால்: காரைக்காலில் ரயில் மோதி பெண் இறந்தது குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.காரைக்கால் அடுத்த வாஞ்சூர் ரயில் பாதை வழியாக நேற்று முன்தினம் இரவு வேளாங்கண்ணியில் இருந்து டெமோ பயணிகள் ரயில் காரைக்காலுக்கு சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் மீது ரயில் மோதியது. பெண்ணின் அலறல் சத்தம்கேட்டு கேட் கீப்பர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது பெண் ரயில் மோதி இறந்து கிடப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த திருப்பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை