மேலும் செய்திகள்
பொதுமக்களுக்கு இடையூறு இருவர் கைது
25-May-2026
புதுச்சேரி: பொது மக்களுக்கு இடையூறு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கணுவாப்பேட் பகுதியைச் சேர்ந்த தீபன், 25; கூடப்பாக்கம் ஆனந்த், 27, ஆகியோர் மது போதையில், கோட்டைமேடு பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
25-May-2026