உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அடையாளம் தெரியாத நபர்கள் சாவு

 அடையாளம் தெரியாத நபர்கள் சாவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாதவர்களை பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புஸ்சி வீதியில், கடந்த 28ம் தேதி, 50 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அண்ணா சாலை, ராஜா தியேட்டர் அருகில், கடந்த 8ம் தேதி, 50 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார் என, பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை