மேலும் செய்திகள்
இறந்த முதியவர்கள் யார்? போலீசார் விசாரணை
14-Jan-2025
திருக்கனுார்: திருக்கனுாரில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருக்கனுார் மாரியம்மன் கோவில் திடல் அருகே, நேற்று 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடப்பதாக, திருக்கனுார் போலீசாருக்கு தகவல்வந்தது.போலீசார் சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து, திருக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை பற்றி தெரிந்தவர்கள், திருக்கனுார் போலீசில் 0413-2688435 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
14-Jan-2025