உள்ளூர் செய்திகள்

உறியடி உற்சவம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை மந்தைவெளி திடலில் அமைந்துள்ள பூமி நிலா சமேத சத்யநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கோகுலஷ்டமி யையொட்டி நேற்று முன்தினம் மாலை உறியடி உற்சவம் நடந்தது. முன்னதாக காலை 8.30 மணிக்கு கோ பூஜை, மகா திருமஞ்சனம், அபிேஷக ஆராதனைகளும், மாலை 5.00 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6.00 மணிக்கு கண்ணபிரானுக்கு பெருமாள் திருமேணி அலங்கார அவதாரத்தில் கேரள மேளத்துடன் சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை மடுகரை கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை