உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வி.சி., மறியல்

 பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வி.சி., மறியல்

பாகூர்: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு மற்றும் மும்மொழி கல்விக் கொள்கை திட்டத்தை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், புதுச்சேரி - கடலுார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியக்கோவில் சந்திப்பு அருகே நடந்த போராட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் தாயப்பன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல் காங்., நிர்வாகிகள் கோபு, துணைத் தலைவர் தாண்டவராயன், அரிகிருஷ்ணன் பக்கிரி, முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு மற்றும் மும்மொழி கல்விக் கொள்கை திட்டத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தினால், புதுச்சேரி - கடலுார் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை