உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரியாங்குப்பத்தில் 15ம் தேதி குடிநீர் கட்

அரியாங்குப்பத்தில் 15ம் தேதி குடிநீர் கட்

புதுச்சேரி: அரியாங்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்வதால், நாளை மறுநாள் (15ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதனால், நாளை மறுநாள் 15ம் தேதி மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை, அரியாங்குப்பம் கிழக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ