உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.வில்லியனுாரில் உள்ள பிரசித்திபெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில், தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:00 மணியளவில் பெருமாள் தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.விழாவில் வில்லியனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சந்தானராமன் மற்றும் உற்சவதாரர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ