முழு நேரம் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவரா?
சட்டசபை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்;வெங்கடேசன்(பா.ஜ): பொதுப்பணித் துறையில் 15 ஆண்டுகள் மேலாக 37 முழு நேர தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் எப்போது பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.அமைச்சர் லட்சுமிநாராயணன்: இந்த 37 முழு நேர தினக்கூலி ஊழியர்களை பல்நோக்கு ஊழியர் பதவிக்கு பணியமர்த்துவதற்கான கோப்பு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதி துறை கூடுதல் விபரங்களை கேட்டுள்ளது. அந்த விபரங்கள் பொதுப்பணித் துறையின் பல்வேறு பிரிவுகளில் கேட்கப்பட்டது. விரைவில் அரசாணை வெளியிடப்படும்.