உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

காரைக்கால்,: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கொள்ளுமாங்குடி அகர கொத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் முருகன், 44; பெயிண்டர். இவர் நேற்று காரைக்கால் அம்பகரத்துார் வடக்கு வெள்ளாளர் தெருவை சேர்ந்த வரதராஜன் என்பவர் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கீழே கிடந்த டியூப் லைட் வொயரை கையில் பிடித்த போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடன் பணியாற்றிவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் அம்பகரத்துார் போலீசார் வீட்டின் பராமரிப்பாளர் சுரேஷ் மற்றும் உரிமையாளர் வரதராஜன் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை