உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  உலக சிறுநீரக தின விழிப்புணர்வு முகாம்

 உலக சிறுநீரக தின விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி: உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையம் சார்பில், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுநீரக விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மைய சிறுநீரகத் துறைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். சுகாதாரத் துறை இயக்குனர் செவ்வேள், இணை இயக்குனர் சமி முனிஷாபேகம், மருத்துவக் கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயல்பாடு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷவர்தன் சர்மா மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், டயாலிசிஸ் மற்றும் லேப் டெக்னீஷியன்கள், மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை